அழகா, கள்ளழகா!

அழகா, கள்ளழகா!



அழகா, கள்ளழகா!

ஆசை வச்சேன், கண்ணழகா!

அழகா, கள்ளழகா!

ஆசை வச்சேன், கண்ணழகா!

ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...


தன்னால் வரைந்தேனே –

அட, அது தான் அழகா!

கண்ணால் அறிந்தேனே –

அட, இது தான் அழகா!

கெண்டை விழி கெஞ்சும் படி,

தண்டைகலும் அஞ்சும் படி –

துடிப்பது எனக்கழகா!


அழகா, கள்ளழகா!

ஆசை வச்சேன், கண்ணழகா!

ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...


விடி வெள்ளியில் விடியும் வரை,

இருள் வெள்ளமும் வடியும் வரை –

தினம் தினம் விழித்திருந்தேன்,

எந்தன் தூக்கம் எறித்திருந்தேன்!


ஒரு நாள் இங்கு வருவாய் என,

திரு நாள் ஒன்று தருவாய் என –

உயிர் சுமை பொருத்திருந்தேன்,

இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்...


ஆறெல்லாம் தண்ணீர் போனாலும்,

எந்தன் கூடமோ நிறையவில்லை!

என் வீடு வாசல் வந்தாலும்,

தாண்டி சென்றேன், புரியவில்லை...


மலர் கோர்த்திடும் மென் ஊசிகள்,

உன்னால் என் விரல் கோர்த்திடும் –

அதில் வழி அறிந்ததில்லை...


அழகா, கள்ளழகா

ஆசை வச்சேன், கண்ணழகா!

ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...


உதடோ, உந்தன் பெயர் சொன்னது;

உலகோ தினம் பழி சொன்னது!

ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய்,

இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்...


உடல் என்பது நான் கொண்டது,

உயிர் என்பது நீ கொண்டது!

வந்து எனை எழுப்பி விட்டாய்,

எந்தன் வாழ்வை ஆசையவைத்தாய்...


கண்டேனே காதல்,

கொண்டேனே –

எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை!

இடை தொட்டாடும் வண்ண பட்டாடை,

எந்தன் பேச்சை கேட்கவில்லை...


கண்ணன் என் மொழியானது,

பெண்ணில் இரு விழியானது –

இனி அது பிரிவதில்லை...


அழகா, கள்ளழகா!...



Post a Comment

0 Comments