அழகா, கள்ளழகா!
அழகா, கள்ளழகா!
ஆசை வச்சேன், கண்ணழகா!
அழகா, கள்ளழகா!
ஆசை வச்சேன், கண்ணழகா!
ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...
தன்னால் வரைந்தேனே –
அட, அது தான் அழகா!
கண்ணால் அறிந்தேனே –
அட, இது தான் அழகா!
கெண்டை விழி கெஞ்சும் படி,
தண்டைகலும் அஞ்சும் படி –
துடிப்பது எனக்கழகா!
அழகா, கள்ளழகா!
ஆசை வச்சேன், கண்ணழகா!
ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...
விடி வெள்ளியில் விடியும் வரை,
இருள் வெள்ளமும் வடியும் வரை –
தினம் தினம் விழித்திருந்தேன்,
எந்தன் தூக்கம் எறித்திருந்தேன்!
ஒரு நாள் இங்கு வருவாய் என,
திரு நாள் ஒன்று தருவாய் என –
உயிர் சுமை பொருத்திருந்தேன்,
இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்...
ஆறெல்லாம் தண்ணீர் போனாலும்,
எந்தன் கூடமோ நிறையவில்லை!
என் வீடு வாசல் வந்தாலும்,
தாண்டி சென்றேன், புரியவில்லை...
மலர் கோர்த்திடும் மென் ஊசிகள்,
உன்னால் என் விரல் கோர்த்திடும் –
அதில் வழி அறிந்ததில்லை...
அழகா, கள்ளழகா
ஆசை வச்சேன், கண்ணழகா!
ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய், உனக்கழகா...
உதடோ, உந்தன் பெயர் சொன்னது;
உலகோ தினம் பழி சொன்னது!
ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய்,
இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்...
உடல் என்பது நான் கொண்டது,
உயிர் என்பது நீ கொண்டது!
வந்து எனை எழுப்பி விட்டாய்,
எந்தன் வாழ்வை ஆசையவைத்தாய்...
கண்டேனே காதல்,
கொண்டேனே –
எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை!
இடை தொட்டாடும் வண்ண பட்டாடை,
எந்தன் பேச்சை கேட்கவில்லை...
கண்ணன் என் மொழியானது,
பெண்ணில் இரு விழியானது –
இனி அது பிரிவதில்லை...
அழகா, கள்ளழகா!...
0 Comments