சுவையான அப்பளம் பொரியல்
தேவையான பொருட்கள்
அப்பளம் - 8
தேங்காய் - 4 சில்
பூண்டு - 4,5 பல்
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
புளி - 3 முத்து அளவு
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
செய்முறை:-
வாணவியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்த அப்பளத்தை பொரித்தெடுக்கவும்.
மிக்ஸியில் நான்கு தேங்காய் சில், நான்கு ஐந்து பூண்டு, ஒரு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம்,, இரண்டு கார மிளகாய், மூன்று முத்து அளவு புளி, மசாலாவுக்குத் தேவையான அளவிலிருந்து கொஞ்சம் குறைத்து உப்பு (ஏனென்றால் அப்பளத்தில் உப்பு இருக்கும்). சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்ததும், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை போட்டு கிளறி, வெங்காயம் நன்றாக கலர் மாறவும், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, பச்சை வாசம் போக எண்ணெயிலேயே வதக்கவும்.
அத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளுங்கள்.
பச்சை வாசனை போய் மசாலா கொஞ்சம் நிறம் மாறவும், அப்பளம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கம்மியான நெருப்பில் இரண்டு நிமிடம் அப்படியே வைத்திருந்து, அடுப்பை அணைத்து விடுங்கள்.
சுவையான அப்பளப் பொரியல் ரெடி!
குறிப்பு:
விருப்பமுள்ளவர்கள் கடலைப்பருப்பு வேக வைத்து, பொரித்த அப்பத்தை மசாலாவில் போடும்போது சேர்த்தால் சுவை அள்ளும்.
0 Comments