பூண்டு மிளகு சாதம்
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
பூண்டு - 2 கட்டி (ஒரு கைப்பிடி
மிளகு - 1 ½ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
பெரிய வெங்காயம் - 1
மல்லி தழை - கொஞ்சம்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
(அல்லது நெய்
அல்லது நல்லெண்ணெய்)
கடுகு உளுந்தம்பருப்பு - 1ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2ஸ்பூன்
நிலக்கடலை - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
வர மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு -10,12(விருப்பப்பட்டால்)
செய்முறை:
சாதத்தை உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு கட்டி பூண்டை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை ஒன்றிரண்டாக இடித்தும் சேர்க்கலாம்.
ஒன்றரை ஸ்பூன் மிளகை நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க வறுக்கவும்.
கடுகு வெடித்ததும் கருவேப்பிலை வரமிளகாய் போடவும்.
அத்துடன் முந்திரி பருப்பு, வறுத்த நிலக்கடலை சேர்த்து கிளறவும்.
மிகப் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து, மீடியம் ஃப்ளேமில் பூண்டு நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதங்குங்கள்.
அனைத்தும் நிறம் மாறி, நன்கு வதங்கியதும் அதில் பொடித்து வைத்துள்ள மிளகு சேர்த்து கிளறி, இறுதியாக மல்லித்தழை பொடியாக நறுக்கிச் சேர்த்து, இறக்கி. சாதத்துடன் நன்கு கிளறவும்.
சுவையான ஆரோக்கியமான பூண்டு மிளகு சாதம் தயார்.
குறிப்பு:
இத்துடன் உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு கார கறி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சுட்ட அப்பளம்
தயிரில் சீரகம் சேர்த்தும் சைட் டிஷ் சாக பயன்படுத்தலாம்.
0 Comments